சிவபுராணம் ..

சிவபுராணம் என்பது திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்
சிவபுராணத்தின் சிறப்பு :
-----------------------------------------
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
சிவபுராணத்தின் நோக்கம்
--------------------------------------------
முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.
சிவபுராணத்தின் அமைப்பு
---------------------------------------------
உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.
சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்[தொகு]
-------------------------------------------------------------------------------------------
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.
இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.
இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.
சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.
இறைவன்[தொகு]
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்
உயிரும், மலங்களும்
-------------------------------------
உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்
பிறவிச் சுழல்
----------------------
உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.
இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
அல்லல் பிறவி அறுப்பானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

எடையே இல்லாத ஒன்றுமில்லாத ஒன்று....

எடையே இல்லாத அந்த ஒன்றுமில்லாத ஒன்று தான் இந்த 70 கிலோ எடையை இயக்கிக் கொண்டிருக்கிறது!70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2.
கார்பன் 16 கிலோ கிராம்
3.
ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4.
நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5.
கால்சியம் 1.0 கிலோ கிராம்
6.
பாஸ்பரஸ் 780 கிராம்
7.
பொட்டாசியம் 140 கிராம்
8.
சோடியம் 100 கிராம்
9.
குளோரின் 95 கிராம்
10.
மக்னீசியம் 19 கிராம்
11.
இரும்பு 4.2. கிராம்
12.
ஃப்ளூரின் 2.6 கிராம்
13.
துத்தநாகம் 2.3 கிராம்
14.
சிலிக்கன் 1.0 கிராம்
15.
ருபீடியம் 0.68 கிராம்
16.
ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17.
ப்ரோமின் 0.26 கிராம்
18.
ஈயம் 0.12 கிராம்
19.
தாமிரம் 72 மில்லி கிராம்
20.
அலுமினியம் 60 மில்லி கிராம்
21.
காட்மியம் 50 மில்லி கிராம்
22.
செரியம் 40 மில்லி கிராம்
23.
பேரியம் 22 மில்லி கிராம்
24.
அயோடின் 20 மில்லி கிராம்
25.
தகரம் 20 மில்லி கிராம்
26.
டைட்டானியம் 20 மில்லி கிராம்
27.
போரான் 18 மில்லி கிராம்
28.
நிக்கல் 15 மில்லி கிராம்
29.
செனியம் 15 மில்லிகிராம்
30.
குரோமியம் 14 மில்லி கிராம்
31.
மக்னீசியம் 12 மில்லி கிராம்
32.
ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33.
லித்தியம் 7 மில்லி கிராம்
34.
செஸியம் 6 மில்லி கிராம்
35.
பாதரசம் 6 மில்லி கிராம்
36.
ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37.
மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38.
கோபால்ட் 3 மில்லி கிராம்
39 .
ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40.
வெள்ளி 2 மில்லி கிராம்
41.
நியோபியம் 1.5 மில்லி கிராம்
42.
ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43.
லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44.
கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45.
டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46.
இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47.
பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48.
தால்வியம் 0.5 மில்லி கிராம்
49.
இண்டியம் 0.4 மில்லி கிராம்
50.
தங்கம் 0.4 மில்லி கிராம்
51.
ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52.
தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53.
வாளடியம் 0.11 மில்லி கிராம்
54.
தோரியம் 0.1 மில்லி கிராம்
55.
யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56.
சமாரியம் 50 மில்லி கிராம்
57.
பெல்யம் 36 மில்லி கிராம்
58.
டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!


விளையும் , வெற்றியும்

விளையும் , வெற்றியும் .                                                                நீங்கள் உங்களை உயர்த்தும் பொழுது வேறு ஒருவரையும் உயர்த்துங்கள். 
தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் தராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இதுவே வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரம்.
ஏதோ சந்தர்ப்பவசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது . அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை . அப்போது இயன்ற வரையில் நான் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து , நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும் படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?
அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது . பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அவை கிடைக்கும் சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காக கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.
எந்த இடத்திலே , எந்த காலத்திலேயே, எந்த நோக்கத்தோடு , எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே விளையும் வரும். வெற்றியும் வரும்

அன்பு உண்மையில் இருக்குமானால் அங்கு வார்த்தைகள் தேவையில்லை

                                                                                                                                                                 அமைதியாய் இருக்கும்போது தான்
அழகு அன்பு பிரார்த்தனை எல்லாம்
உங்களிடம் வரும்
வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அவை உங்களை வசியப்படுத்தி விடும்
அன்பு என்ற வார்த்தை அன்பு அல்ல
அது ஒரு குறியீடு போன்றது
அன்பு உண்மையில் இருக்குமானால் அங்கு வார்த்தைகள் தேவையில்லை
வார்த்தைகளை அப்படியே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்
மனிதனின் உள்ளே பாருங்கள்
கண்களின் உள்ளே பாருங்கள்
முழுமையை உணருங்கள்
வார்த்தைகள் தேவை இல்லை

ஆன்மிகம். வேறு எதுவும் அல்ல!!!

தன்னை இழக்கும் கலையே ஆன்மிகம். வேறு எதுவும் அல்ல!!!
--------------------------------
ஆன்மிகம் என்றால் காற்றில் பறப்பதோ, நீரில் மிதப்பதோ அல்ல. நீங்கள் இல்லாமல் போவது. ஆம் உங்கள் இல்லாத ஜீவத்துவத்தின் கொலைக்களமே ஆன்மிகம்.
ஆன்மிகம் எதனையும் உங்களுக்கத் தராது. மாறாக எதையெல்லாம் நீங்கள் உங்களுடையது என்று தவறாக கற்பனை செய்து வைத்துள்ளீரோ, அவைகள் எதுவுமே உங்களுடையது அல்ல என்னும் அதிர்ச்சியான உண்மையை கூறும் தயவுதாட்சண்யம் ஆற்ற ஞாயஸ்தானமே ஆன்மிகம்.
ஆன்மிகம் துன்பங்களை எதிர்கொள்ள துணிவில்லாமல் ஓடும் முதுகெலும்பு அற்ற கோழைகளுக்கு அல்ல. மரணம் என்றால் என்ன என்று தீரத்துடன் ஆராய்ந்து, மரணத்தையே ஜெயிக்கக்கூடிய திடம் படைத்த மனோ வீரர்களுக்கானது தான் ஆன்மிகம்.
தன் தலை வலியையும், வாயிற்று வலியையுமே பொருதுக்கொள்ள முடியாமல் அதற்கு தீர்வு தேடி ஜோல்சியரையும், பரிகாரங்களையும், தெய்வத்தையும் தேடி ஓடும் திறமை அற்றவருக்கு அல்ல ஆன்மிகம்.
அகண்ட, பரிபூரண, இரண்டுகள் அற்ற, எங்கும் நிறைந்துள்ள பிரம்மத்தின் சுய வடிவை உணர்ந்து, கற்பனையான தன் ஜீவத்தோற்றத்தை, பிரம்மத்தில் இரண்டற கரையச்செய்து, தங்கள் மாயஜீவத்தோற்றத்தை கொலை செய்யும் துணிவுகொண்ட தீரர்களுக்கே ஆன்மிகம்.
இப்பிரபஞ்சத்தில் எதுவுமே தனித்தனியாக இல்லை. அனைத்துமே. ஒன்றினைக்கப்பட்டே உள்ளது. பூமியோ,ஆகாயமோ,காற்றோ,உஷ்ணமோ,..... எதோ ஒன்றன்மூலம் அனைத்துமே ஒன்றினைப்பட்டே உள்ளன. ஒரு கோளும் மற்றொரு கோளும் அவைகளுக்கிடையில் உள்ள ஆகாயத்தால் இணைக்கப்படுள்ளன. ஒருமரமும் மற்றொரு மரமும் பூமியால், காற்றால் இணைக்கப்படுள்ளன. அவ்வாறே இப்பிரபஞ்சம் முழுவதும் இணக்கப்பட்டு இரண்டுகள் அற்று உள்ளது. எவ்வாறு நம் உடலில் பல அனந்த கோடி உயிரணுக்கள் ஒன்று கூடுவதால் ஒரே தேகம் உருவாகிறதோ, அவ்வாறே அனந்தகோடி பொருட்கள் ஒருங்கிணைந்து ஒன்றானதே பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் ஆகும். இங்கு எதற்கும் தனித்த இயக்கமோ, செயல்பாடோ கிடையாது. இதில் உலகமும், ஜீவனும் பொய்யாகும். இந்த உண்மையை உணரும் தயிரியம் உள்ளவருக்கே ஆன்மிகம். ஒன்றேயான பிரபஞ்சத்தில் இரண்டாவதாக ஒரு உலகத்திற்கோ, தனித்துவம் படைத்த ஜாவனுக்கோ இடமே இல்லை. உங்கள் ஜீவத்தோற்றம் உங்கள் கற்பனையே!!!

‪#‎தந்தைக்கு‬ நிகர் தந்தையே

‪#‎தந்தைக்கு‬ நிகர் தந்தையே......[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]
நம் அனைவருக்கும் தாயின் பாசம் தான் தெரியும், நாம் வளர்ந்து நம் வேலைகளை நாமே செய்துக் கொள்கிற வரை நம்மை தாங்கி நிற்பவள் தாய். இந்த காலகட்டங்களில் நமக்கு, பொதுவாக எல்லோருக்குமே தந்தையிடம் பெரிதாக ஈடுபாடு இருக்காது, அம்மா சாப்பாடு ரெடியா? அம்மா என் டிரஸ் ரெடியா? அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடு, அம்மா அப்பாகிட்டே சொல்லு எனக்கு அது வேணும், இது வேணும் என்று அம்மாவே உலகமாக இருப்போம், அப்பாவிடம் பாசம் இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியிருக்கும் அது வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும் ஒரு கட்டத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொள்வதே குறைந்து விடும். நம் தந்தையை நாம் புரிந்து கொள்வது எப்போது என்றால் நாம் தந்தையாகும் போது தான், இந்த சூழ்நிலையில் அப்பா எப்படி கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நாம் நம் வாழ்கையில் அனுபவிக்கும் போது தான் உணர்வோம்.
தந்தையின் தியாகமும் தாய் செய்யும் தியாகத்திற்கு குறைந்ததல்ல, குடும்பத்தில் அமைதியான, அழகான சுமுக நிலை நிலவ வேண்டுமானால் அதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியமானது. தந்தை ஒரு குடிகாரராகவோ, மற்ற ஏதும் கெட்டப் பழக்கம் உள்ளவராகவோ இருந்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மனைவி மக்கள் எல்லாரும் பாதிக்கப்படுவர். வாழ்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அது இருந்தால் தான் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சுவைக்க முடியும். தந்தை சீரான பொருளாதார வசதி அளித்தால் தான் தாயால் அவள் கடமைகளை சரிவர செய்ய முடியும், குழந்தைக்கு பாலுட்டுவதிலிருந்து பள்ளி கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை. தந்தையின் பங்கு கட்டிடத்தின் அடியில் இருக்கும் அஸ்திவாரம் போல் வெளியே தெரிவதில்லை.
தாயின் பங்கு வெளிப்படையானது எந்த குழந்தையும் புரிந்து கொள்ளும் தாய் நமக்காக பாடுபடுகிறாள் என்று, ஆனால் தந்தையின் பங்கை புரிந்து கொள்ள நமக்கு வயதும் முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.
ஒரு தாய் தன் பிள்ளைகளை 10 மாதந்தான் சுமக்கிறாள் ஆனால் தந்தை தன் மனைவி மக்களை இறக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான். தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தன்னை கடினமாக்கிக் கொண்டு கண்டிக்கும் போதே தந்தையின் தியாகம் தொடங்கி விடுகிறது. தன் பிள்ளைக்கு தன் மேல் வெறுப்பு வரும் என்று தெரிந்தும் தன் பிள்ளை வழி தவறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்துக் கொள்கிறார்.
ஒருவன் தந்தையாகிவிட்டப் பிறகு தனக்கென்று எதையும் சிந்திப்பதில்லை, இதை பிள்ளைக்கு வாங்கலாம் இதை மனைவிக்கு வாங்கலாம் என்று தனக்கான தேவைகளை முற்றும் குறைத்துக் கொள்கிறான், பொருளாதர வகையில் பாhத்தால் கூலித் தொழிளாலி தந்தை முதல் கோடீஸ்வரத் தந்தை வரை பல விதமான அழுத்தங்களை கஷ்டங்களை பொருளீட்டும் போது சந்திக்க வேண்டி வருகிறது, அனைத்தும் யாருக்கு மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தையர்களின் பிரதான நோக்கமாய் இருக்கும்.
தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி முழுமையாக உணர்வோம். எங்கோ படித்த ஒரு விசயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், 10 வயது வரை என் தந்தையை விட பலசாலி யாரும் இல்லை, என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம் (அதனால் தான் ரயில் எப்படி ஓடுகிறது, விமானம் எப்படி பறக்கிறது என்பது போன்ற கேள்விகள் கேட்கிறோம்) 15 வயசுக்கு பிறகு தந்தை இந்த காலத்துக்கு பொறுந்தாத ஆள் என்று நினைக்கிறோம், 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம், 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம், 40 வயதுக்கு மேல் இந்த பிரச்கனைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம் இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் விசயம்.
ஆக தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப் படுகிறது. இன்று நாம் படித்து நல்ல வேவையிலோ, நல்ல தொழிலோ இருப்பதற்கு தந்தை என்ற அந்த ஏணியை பயன் படுத்தித் தான் வந்திருப்போம் (ஏணியை உதைப்பவர் எத்தனையோ பேர்) அதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று. தந்தைக்கு நிகர் தந்தையே..

உயிரும் ஆன்மாவும் :

உயிரும் ஆன்மாவும் :

உடம்பு, உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். இந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த அத்தியாயம் ஆராய்கிறது.

இந்த ஆன்மா என்று நாம் யாரைத் தியானிக்கிறோம்? இருவரில் யார் ஆன்மா? யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, பேசுகிறோமோ, இனிப்பு-கசப்பு என்று பகுத்தறிகிறோமோ அவரே ஆன்மா.

உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகின்றன. ஆனால் கதிரவன் எதிலும் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அவனது முன்னிலையில் அனைத்தும் நடைபெறுகின்றன. அது போல், ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க, உயிர் உலகின் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது.

முண்டக உபநிஷதம் ஓர் உவமையின் மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ‘ஓர் மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும், புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்பதும் அதன் காரணமாக இன்பதுன்பங்களை மாறிமாறி அனுபவிப்பதுமாக இருக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது. இங்கே, அனுபவிக்கின்ற பறவை ஜீவனையும் மற்ற பறவை ஆன்மாவையும் குறித்து நிற்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் தமது கையில் அடிபட்டபோது கூறினார்; இதனுள் {நம் உடம்பினுள்} இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை ......இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குதான் கை உடைந்தது . கை உடைவது போன்ற சுகதுக்கங்கள் உயிருக்கே என்பது இங்கே உணர்த்தப்படுகிறது.

பார்ப்பது, கேட்பது போன்ற அனுபவங்கள் உயிருக்கு. ஆனால், பார்ப்பது கேட்பது போன்ற அனுபவங்களுக்கு ஆதாரமாக இருப்பது ஆன்மா. அனைத்திற்கும் சாட்சியாக விளங்குகின்ற அதையே நாம் தியானிக்க வேண்டுமென்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

ஆன்மாவே ஆதாரம்:

அந்த ஆன்மாவே புத்தியாகவும், மனமாகவும் ஆகியிருக்கிறது. உணர்வு (PERCEPTION), ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக் கூர்மை, உள்ளுணர்வு (INSIGHT), மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத் தெளிவு, மனக்கலக்கம், நினைவு, நிச்சய புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நாட்டம் என்பவை ஆன்மாவின் பல பெயர்கள் ஆகும்.

பேருணர்வுப் பொருளான ஆன்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும் அனைத்துமாக விளங்குவதும் அதுவே. ஏனென்றால் அதுதான் மனிதனின் அழியாத உணர்வுப் பொருள். உடம்பின் இயக்கங்களாக, மனதின் இயக்கங்களாக அந்த ஆன்மாவே திகழ்கிறது.