இந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும்! ஆறு முக்கிய பிரிவுகளும் –


ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும்,
அவை அத்த‍னையம் கீழுள்ள‍ ஆறு முக்கிய கடவுகள் மற்றும் பிரிவுகளிலிலிருந்தே உட்பிரிவுகளாக பிரிந்துள்ள‍து.
இப்போது இந்து சமயத்தில் உள்ள‍ முக்கியமான ஆறு கடவுள்கள்?
1. சிவபெருமான்
2. மகாவிஷ்ணு
3. ஆதிபராசக்தி
4. விநாயகப் பெருமான்
5. முருகப் பெருமான்
6. சூரிய பகவான்
இப்போது இந்து சமயத்தில் உள்ள‍ ஆறு முக்கிய பிரிவுகளைப் பார்ப் போமா?
1. சைவம்
2. வைணவம்
3. சாக்தேயம்
4. காணபத்தியம்
5. கௌமாரம்
6. சௌரம்
மேற்கண்ட கடவுள்களை எந்தெந்த பிரிவினர் வணங்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
1 . சைவம் – சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
2 .வைணவம்–மகாவிஷ்ணு பகவானை முழு முதற் கடவுளாக வணங்குவது.
3 . சாக்தேயம் – ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
4 . காணபத்தியம் – கணபதியாகிய விநாய கப் பெருமானை முழு முதற் கடவுளாக வழிபடுவது.
5 .கௌமாரம்–குமரக் கடவுளாகிய முருக ப் பெருமானை முழு முதற்கடவுளாக வழி படுவது.
6 . சௌரம் – சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

""ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். .

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.

""சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?'' என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது.

""சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?'' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.

""கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!'' என்றார். இளைஞனுக்கு கோபம்.

""வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.

""மகனே! மவுனமே எனது பதில்'' என்றார் துறவி. இளைஞனோ,""இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்றான்.

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,'' என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்...

மனோசக்தியே மந்திரசக்தி.


எப்படி மின்சாரத்தைப் பற்றிப் படித்து மின்சார விசிறியும், மின்சார ரெயிலும் ஓட்டுகிறோமோ, அதைப்போல மனதைக் கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் கற்றுக்கொண்டோமானால், நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம்.
நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.
அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம்.
இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.
ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது. ஒருமுகப்படுத்தும்போது சக்தி அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.
இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்' என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான் இரகசியமாகச் சொல்வதன் காரணம்.

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?
ஆழ்மனம்
திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.
"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும்.
திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.
ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.
சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது..

இந்துசமயம் ,இந்துமதம் ,ஹிந்து சனாதன தர்மம்...


தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.
நம் முன்னோர்கள் அதை சனாதனதர்மம் என்று அழைத்தனர். அதன் பொருள், அது ஆதியந்தமில்லாதது மனிதனால் தோற்றுவிக்கப்படாத புராதான நெறி என்பதாகும்.
எப்படி இறைவனை, பரம்பொருளை ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடியாதோ அதேபோன்று அப்பரம்பொருளை உணரவும், அடையவும் உண்மையாகத் துணைநிற்கும் இந்த தர்மநெறியையும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது.
இதன் கடவுள் கோற்பாட்டை ஆராய்வதற்கு கீழ்காணும் பாடலை ஆதாரமாகக் கொள்ளலாம்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி, நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!- மணிவாசகர் திருவாசகம்
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், அவர் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றார். பல்வேறு நாம ரூபங்களில் வெளிப்படும் ஓர் இறைவனை அதே பல்வேறு நாம ரூபங்களில் வழிபடுவது இயல்பானது சிறப்பானது.
சனாதனதர்மத்தில் வழிபடப்படும் திருக்கோலங்களின் அடிப்படையில் ஆறு சமயங்கள் நிறுவப்பட்டுள்ளன அவை
1) சைவம் – சிவன்
2) காணாபத்யம் – கணபதி
3) கௌமாரம் – முருகன்
4) சாக்தம் – சக்தி
5) வைணவம் – விஷ்ணு
6) சௌரம் – சூரியன்
ஆக இவற்றில் எந்த சமயத்தை எடுத்துக்கொண்டாலும் அது சனாதனதர்மம்தான், எப்படி நமது உடல் உறுப்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரே மனிதனாக உள்ளோமோ அதைப்போன்றதுதான் இதுவும்.
நமது குழந்தை, ஒளிந்துகொண்டு தலையைமட்டும் காட்டி விளையாடினால் நாம் அதன் பெயரைச்சொல்லி அழைப்போமா அல்லது தலையே வா என்று அழைப்போமா?
மேலும் வர்ணாசிரம நிலை இந்த 6 சமயங்களுக்கும் பொதுவானது, இதை இன்று மற்ற அனைத்துசமயங்களிலும் காணலாம். இங்கு வர்ணம் என்பது வேறு சாதி என்பது வேறு
சைவசமயத்திலும் 1)பிரமச்சரியம், 2)கிரகஸ்தம், 3)வானப்பிரஸ்தம், 4) சந்யாசம். ஆகிய நிலைகளைக் கடைபிடிதோர் இருந்தனர்.
வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்
விளங்குபரம்பொருளேநின் விளையாட்டல்லால்
மாறுபடுங்கருத்தில்லை முடிவின்மோன
வாரிதியினதித்திரள்டோல் வயங்கிற்றம்மா. – தாயுமானவர்
...ஓம் சிவாயநம ...

சிவாய நம என்றுரைப்பவர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை

சிவாய நம  , சிவ நாமங்களில் மிக உயர்வானது அதனால் எந்நாளும் எந்நேரமும் சிவபக்கதர்கள் இந்த மந்திரத்தை உச்சரிப்பர்.
ஒருமுறை நாரத முனிவர் பிரம்மாவிடம் சேறு தந்தையே சிவநாமங்களில் உயர்வானது சிவாயநம என்கிறார்கள். இதன் அர்த்தத்தை விளக்குங்கள் ஏறு கேட்டார். பிரம்மாவும் உடனே
மகனே அதோ அந்த வண்டிடம் போய் அதைக்கேள் என்றார். நாரதரும் அப்படியே கேட்க வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதர் பிரம்மாவிடம் ஓடிவந்து தந்தையே சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள் என்று கூறினார். பிரம்மா சிரித்தபடியே நாரதா நீ தவறாகப் புரிந்து கொண்டாய் அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள் அது பதிலளிக்கும் என்றார். நாரதர் பயந்தபடியே ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க அதுவும் கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிபோய் திரும்பி வந்தார்.
பிரம்மா, நாரதமுனிவரிடம் இன்னும் ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள் அது பதிலளிக்கும் என்றார். தந்தையே கன்றுக்கு ஏதாவது ஒன்றானால் அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம் வேண்டாம் என நடுங்கினார்.
நீ போ என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா நிலைமை சிக்கலாகும் என நினைத்த போதே பிரம்மா அவரிடம் கன்றும் இறந்து விட்டதா பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள் என்றதும் அப்பா என்ன இது மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த குழந்தை இறப்பதை என் மனது எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றார்.இருந்த போதிலும் பிரம்மா விடவில்லை. நாரதா இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும் என்றார்.
நாரதர் நடுங்கியபடி சென்று குழந்தையிடம் இதைக் கேட்டார். அதற்கு அந்தக் குழந்தை இவ்வாறு கூறியது. முனிவரே இந்த மந்திரத்தைக் கேட்ட வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பின்னர் கொக்கானேன். அதன்பின்னர் பசுக்கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம சி- சிவம், வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், சிவாயநம என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர் என்று அந்தக்குழந்தை நாரதமுனிவருக்கு உபதேசம் செய்தது.
சிவாயநம....

சொர்க்கம்.

 ஓம்என்ற எழுத்து நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒலி வடிவாக மூன்று பகுதிகளும், ஒலி அற்றதாக ஒரு பகுதியும் உள்ளது. ஒலி வடிவான மூன்று பகுதிகள் முறையே அகாரம், உகாரம், மகாரம் அதாவது அ, , , என்ற மூன்ரெழுத்தின் வடிவே ஓம்”. ஒலியற்ற நான்காவது நிலையே துரீயம்எனப்படும் பரம்பொருள். ஆத்மாவே பிரம்மம். இந்த ஆத்மா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆத்மா சட உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை விஸ்வன்என்ற பெயருடன் விழிப்பு நிலையில் உள்ளது. இது முதல் நிலை. அதே ஆத்மாவானது சூக்கும உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை தைசசன்என்ற பெயருடன் கனவு நிலையை அடைகிறது. இது ஆத்மாவின் இரண்டாம் பகுதியாகும். அதே ஆத்மா காரண உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை பிராக்ஞன்என்ற பெயருடன் அறியாமையையும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கிறது. இது மூன்றாம் நிலை. ஆத்மாவின் நான்காம் நிலையின் பெயர் துரீயம்எனப்படும். துரீயம் எனில் நான்காவது என்பர். இந்த துரீயம் அறிவு வடிவமானது. எந்த உடலுடனும் சம்பந்தப்படாதது. ஓங்காரத்தின் ஒலி அற்ற நிலையே துரீயம்”. ஆத்மவின் மற்ற மூன்று அம்சங்களான விச்வன், தைசசன், பிராக்ஞன் நிலையற்றதாக உள்ளது. ஆனால் ஆத்மாவின் துரீய அம்சம் நிலையானது.
,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,'' ஒருவர் என்று பிரசங்கம் செய்தார்.

இதை கேட்ட ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது, ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை. அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத் திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா?'' 
அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார். ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது. புல் பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் வந்தது.
''
கிருஷ்ணர், புத்தர், இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.
பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது. இனிய சோலைகள், நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,
''
இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட கிருஷ்ணர், புத்தர், இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''என்று பதில் வந்தது.
கனவு கலைந்தது.இப்போது தெளிவு ஏற்பட்டது. நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்
மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!
தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்; கோபதாபங்கள் குறையும்; நல்ல சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும் .
"
செத்தாரைப் போலத் திரி " இப்படியும் ஒரு ஞானி சொல்லியிருகின்றார். இப்போது நமக்கு விடை கிடைத்து விட்டது. என்ன மனம் திறந்து மௌனமாகி ஜடம் போலாகவேண்டும். மனமிறந்து மௌனமாகி செத்தாரைப் போலத் ஆனால் இறைவனை நமது உடலாகிய ஆலயத்தில் உள்ளே காணலாம் அனைத்தும் சிவன் காலடியில்... 
அனைத்தும் சிவன் காலடியில்...
அண்டப் பெருவெளியில் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவை உள்ளன. தங்களுடைய தவ வலிமையால் ஞானிகள் அவற்றைத் தேடிப் பிடித்து உலகுக்கு வழங்கி உள்ளனர்.
இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன. சூரியன், சந்திரம், மரம், வீடு, நீங்கள், நான் எல்லாமே தொடர்பு உடையவையே. இவற்றில் ஏதவது ஒன்றின் சிறு அசைவும் (மன அசைவு உட்பட) இந்த அண்டம் முழுவதும் பாதிக்கக் கூடும்.
சில மனிதர்கள்(அரசியல்வாதிகளைப்போல) அதிகம் பேசுவார்கள். கடவுள் பேசுவது இல்லை. ஆனால், கடவுள் அனைத்தையும் செய்கிறார்.
இந்தப் பிச்சைக்காரனுக்கு மிகப் பெரிய பணி தரப்பட்டு உள்ளது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவன் தன்னுடைய வேலையைச் செய்கிறான்.
ஒரு லட்சம் வீரர்கள் கோட்டையைத் தாக்கினாலும் ஒருவன்தான் கோட்டை மேலேறிக் கொடியைப் பறக்க விடுவான். அதைப்போல மனிதர்களில் வெகு சிலர்தான் கடவுளுக்கு அருகில் செல்கிறார்கள். அதற்கு ஆன்மிக சாதனை தேவை.
புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது. அது குருவிடம் இருந்து சீடனுக்கு வரவேண்டும்.
இந்தப் பிச்சைக்காரனின் மூன்று ஞானத் தந்தைகள் நிறையவே பணி செய்தனர். அரிவந்தர் ஆரம்பித்தார்; ரமண மகரிஷி கொஞ்சம் செய்தார்; ராமதாசர் நிறைவு செய்தார்.


ஐந்திரம், ஐந்தீ வேட்டல், முத்தீ ஓம்பல் 
----------------------------------------------------------------------------------------
ஐந்திரம் : 
-------------
மனித வாழ்வுக்குத் தேவையான முன் அறிவிப்புக்களை வழங்கிடும் பணியைத் தெளிவாக ஐந்திரம் என்ற ஐந்து வகைப்பட்ட கலைகளாக பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
அவை
1.
பிறப்பியல் (சாதகம்),
2.
வரியியல் (கைரேகை),
3.
பெயரியல் (பேர் ராசி),
4.
அங்கவியல் (உறுப்பிலக்கணம்),
5.
மனையியல் (கட்டிடக் கலையியல் சாத்திரம்)
.
ஐந்தீ வேட்டல்:
-----------------------
இதேபோல் அருளுலகத்தவர்களிடமிருந்து அருளைப் பெறுவதற்கு ஐந்தீ வேட்டல், முத்தீ ஓம்பலுடன், எண்வகை பூசைவிதிகளை, பூசைமொழிகளை பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
அவை
1.
ஓகம் செய்தல்,
2.
ஓமம் செய்தல்,
3.
யாகம் செய்தல்,
4.
யக்ஞம் செய்தல்,
5.
வேள்வி செய்தல்
என்று ஐந்து வகைப்பட்ட கலைகளாக செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
.
முத்தீ ஓம்பல் :
------------------------
1.
சூரியனை வழிபடுதல் (கந்தழி நிலை),
2.
திங்களை (சந்திரனை) வழிபடுதல்,
3.
விண்மீன்களை வழிபடுதல் (கொடிநிலை)
மூன்று வகைப்பட்ட கலைகளை பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
Bottom of Form

சிவ பெருமானின் ஜெபம் செய்ய உகந்த மந்திரங்களும் பலாபலன்களும்!


1.ஒம் கிலியும் யநமசிவ என்று ஜெபம் செய்ய அரசர்கள் முதல்
உலக ஜீவராசிகள் அனைத்து; வசியமாகும்.
2.அங் சிவயநம என்று ஜெபம் செய்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.
3.ஹரி ஓம் நமசிவய என்று ஜெபம் செய்து வர தேகத்தில் நோய் அணுகாது.
4.அம் கிலி சிவாயநம என்று ஜெபம் செய்து வர யோக சித்தி உண்டாகும்.
5.லங் சிவாயநம என்று ஜெபம் செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.
6.இம் ஏ சிவாயநம என்று ஜெபம் செய்து வர பேய் பூதங்கள் ஓடும்.
7.ஓம் கிலியும் நமசிவய என்று ஜெபம் செய்து வர அரசர்கள் மனுக்கள்
ஆகியோர்கள் ஸ்தம்பனமாகும்.

அர்த்தனாரி

அர்த்தனாரி தத்துவம்
பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன். கயிலைநாதன் தான் என்று உணர்ந்த பிருங்கி முனிவர் ஆழ்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்கிவந்தார். ஒரு முறை கையிலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும்போது அங்கே வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கிவிட்டு பார்வதியைத் திரும்பியும் பாராமல் சென்றதைக் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.
இந்த பிருங்கி முனிவரை நம்மையும் வணங்கச் செய்ய வேண்டும் என்னும் ஆசையால் சிவனை மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள். அப்போதும் பிருங்கி முனிவர் வண்டு ரூபமெடுத்து சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நுழைந்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.
இதனால் கோபமுற்ற பார்வதி , தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். பிருங்கி முனிவரின் கால்கள் முடமாகிப் போனது, இறைவா காப்பாற்று என்று பிருங்கி முனிவர் வேண்டவே சிவன் அவருக்கு ஒரு ஊன்று கோல் அளித்தார்.
பார்வதி தன்னை அவமதித்த பிருங்கி முனிவருக்கு ஆதரவாக சிவன் செய்த செயலைக் கண்டு சிவனிடம் கோபித்துக் கொண்டு பூலோகம் வந்து தனக்கும் சிவனுக்கும் இடையே இடைவெளியே இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தாள்.
சிவன் ஒரு மர்மமான புன்னகையுடன் பார்வதியைத் தேடிக்கொண்டு பூலோகம் வந்தார். உமையே உன் தவத்துக்கு மெச்சினோம். இன்றிலிருந்து உனக்கும் எனக்கும் இடைவெளியே இல்லாமல் நாம் இருவரும் இணைந்தே இருப்போம் .நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் . நீ என்னுடன் கலந்துவிடுவாயாக. என்று கூறி பார்வதியை தன்னோடு சமபாகமாக இனைத்துக் கொன்டார்.
அதாவது சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து இணைந்து பாதி சிவனாகவும் பாதி பார்வதியாகவும் ஒரே ரூபமாக மாறிக் காட்சி அளிக்கத் தொடங்கினர். இவ்வாறு தவமிருந்து தன் கணவனுடன் இரண்டறக் கலந்த நாள்தான் கேதார விரத நாள். சுமங்கலிகள் 21 நாள் விரதமிருந்துதீபாவளி தினத்தன்று அர்த்தநாரீஸ்வரரை பஞ்சாட்ஷர மந்திரத்தை தூய மனதோடு சொல்லி வேண்டினால் கணவனின் அன்பு கிடைக்கப் பெற்று , கணவனும் மனைவியும் தீர்க்கஆயுளுடனும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன், தீர்க்க ஆரோக்கியத்துடனும் தீர்க்க ஐஸ்வர்யமாகவும் சகலவிதமான பாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
இந்த விரதம் இருக்கும் போது இலவம் பஞ்சில் நூற்கப்பட்ட இருபத்தோரு இழைகளை மஞ்சள் பூசி முதல் நாளிலிருந்து ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு தீபாவளி நாளன்று அந்த நூலை ஒன்றாக முடிச்சிட்டு பெண்கள் இடது கையில் கட்டிக் கொண்டு இறைவனை வணங்கி கணவனையும் வணங்கி கேதார விரத்த்தை நிறைவு செய்வர். ஆண்களும் இந்த இழையை வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.
கேதார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவேண்டும் என்று அம்பிகை வேண்டிக்கொள்ளவே சிவ. பெருமானும் அப்படியே ஆகுக என்று வரமளித்தார். இன்றும் சேலத்திலே திருச்செங்கோடு என்னும் திருத்தலத்தில் மலைமேல் சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் இந்த அர்த்த நாரீஸ்வரர் திருக்கோலத்தை கண்டு வணங்கி மகிழலாம்.
அர்த்த என்றால் பாதி நாரி என்றால் பெண் ஆகவே தன்னுடலிலே பார்வதிக்கு பாதியை சிவன் அளித்த நாள் கேதார விரதம் . மலைமேல் இருக்கும் இந்த ஆலையத்தில் இன்னொரு சிறப்பு உண்டு. இந்த அர்த்த நாரீஸ்வர்ர் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிருஹத்தில் அர்த்த நாரீஸ்வரர் சிலாரூபத்தின் பாதத்தின் அடியில் ஒரு சுனை உள்ளது. அந்தச் சுனை எப்போதும் வற்றுவதில்லை. அர்ச்சகர் அர்ச்சனை செய்துவிட்டு அந்தச் சுனையிலிருந்து நீரை இரு கைகளாலும்பக்தர்களின் மீது அள்ளித் தெளிப்பார்.
இப்போது மானுட வாழ்வில் அர்த்தநாரி என்னும் தத்துவம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளிடமும் சாத்வீகமும் , மூர்க்கமும் சேர்ந்தே இருக்கின்றன.
அதே போல் மனிதர்களிடமும் ஆண் பெண் வித்யாசமின்றி சாத்வீகமும் ,மூர்க்கமும் இரண்டும் இருக்கின்றன. "எல்லா ஆண்களிடமும் - தேவனும் , ராக்ஷசத் தன்மையும் சாத்வீகமும் மூர்கமும் எல்லா பெண்களிடமும் - தேவதையும் , ராக்ஷசத் தன்மையும் , சாத்வீகமும் , மூர்கமும் இருக்கிறது . நாம் எதை வளர்க்கிறோமோ அதற்கேற்ற பலன் அடையலாம் .ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்.
"திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள்.
இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கல்யாணம் செய்துகொள்வது என்பது இயலாத காரியம். முழுமையாக புரிந்துகொள்ளல் முற்றிலும் இயலாத ஒன்று. முப்பது வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகும் முழுமையாகப் புரிந்து கொள்ளல் , ஏற்படுவதும் இல்லை இதுதான் உண்மை.
ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் தவறு கண்ட இடத்தில், தைரியமாக ,ஆனால் மனம் புண்படாத வகையில் ,எடுத்துக் கூறி தங்களை தாங்களே சரி செய்துகொண்டு, சமன் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம் .
அப்படி இல்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று எண்ணி யதார்த்தமான உண்மைகளைச் சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு காலம் கடந்த பிறகு வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.
இப்போது திருமணம் ஆன சில காலங்களுக்குள்ளேயே விவாகங்கள் விவாகரத்துக்களாக மாறுவதற்க்கு மேற்கூறிய தைரியமில்லாமை தான் மூல காரணம். ஒரே கூரையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்போதே ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழ ஆரம்பிக்கிறோம்.
ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித் தனி அந்தரங்கம் , தனித்தனி சுதந்திரம் எல்லாம் உண்டு என்று ஒப்புக் கொண்டாலும் , தனித் தனி மரியாதை உண்டு என்று ஒப்புக் கொண்டாலும், தம்பதிகள் இருவருக்கும் பொதுவான அந்தரங்கம் பொதுவான சுதந்திரம் ,பொதுவான மரியாதை அன்பு , பாசம் ,நேசம் , எல்லாம் ஏற்படும், காலம் தான் தாம்பத்ய காலம் - அதற்குப் பெயர்தான் தாம்பத்யம்- இனிமையான தாம்பத்யம். இல்லையென்றால் அது வெறும் ஒப்பந்தம்தான்.
தாம்பத்யங்கள் வெறும் ஒப்பந்தங்களாக மாறக்கூடாது! இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன், அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் , என்று மூன்றாம் மனிதர்களைப் போல, ஒதுங்கி ஒதுங்கி பழகுவது வாழ்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் .
“அழ அழச் சொல்பவர் தமர் “ என்று ஒரு பழமொழி உண்டு . நாம் சொல்லும்போது அவர்களுக்கு கோபம் வந்தாலும், வருத்தம் வந்தாலும் அதற்காக அவர்கள் நம்மை உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும் நமக்கும் நன்மை தரக்கூடிய விஷயங்களை தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி புரியவைப்பது என்று பொருள்.
தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில் செல்பவர்களை தட்டிக் கேட்கவும் நல்ல பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டவும் நிச்சயமாக தைரியம் வேண்டும் ,அல்லது அந்த தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். எவ்வளவு சொன்னாலும் கேட்ககாதவர்களை யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,அவர்களுடைய அனுபவம்தான் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
“ இச்சகம் பேசுவது” என்று ஒன்று உண்டு. . மனதில் தீய எண்ணத்தை வைத்துக்கொண்டு நம் நன்மைக்காகப் பேசுவதைப் போன்ற தோற்றத்துடன் பேசுவதைத்தான் இச்சகம் பேசுவது என்பர். இது கேட்பவர்களுக்கு இதமாக இனிமையாக மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான நஷ்டங்களையும் ஏற்படுத்தும். (உதாரணம் ராமாயணக் கூனி என்னும் மந்தரை)
சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று , ஆகவே நம் மேல் உண்மையான அக்கரை இருப்பவர்கள் இதமாக சொல்வார்கள், அதையும் தாண்டி நம் நன்மைக்காக இடித்துரைக்கவும் செய்வார்கள். இதம் , இச்சகம் , இடித்துரைத்தல் இந்த மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை உணரவேண்டும். இதை உணராதவர்கள்தாம் பிரிதல், விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
அர்த்தனாரி என்ற சொல்லுக்கு பாதி பெண் என்று அர்த்தம்.பாதிப் பெண் என்றாலே பாதி ஆண் என்றும் பொருள் வருமல்லவா. ஆகவே தாம்பத்யம் சிறக்க வேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே இல்லறம் இனிமையானதாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் வேண்டாத சுயகௌரவங்களை மனதில் கொண்டோ, அல்லது மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் வரும் தேவையற்ற துர்போதனைகளை மனதில் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக வாழ ஆரம்பிக்கும் போதுதான் வாழ்க்கை சொர்கத்திலிருந்து நரகத்துக்கு தள்ளப்படுகிறது. ( உதாரணம் ராமாயணக் கைகேயி ).
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்றொரு சொற்றொடர் உண்டு. அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதோ இல்லையோ, இணைந்து இயைந்து வாழ்ந்தால் சொர்கமாக மாற்றிக் கொள்ளும் வழி இருக்கிறது. இதில் விஞ்ஞான ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நிறைய பொருள் உள்ளது. இயற்கையாகவே ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு உயிர்கள் உருவாகவே முடியாது. உலகில் பிறந்த எந்த பிறப்பும் ஆண் தன்மையும் பெண்தன்மையும் கலந்து பிறந்ததே.
ஆணுக்குரிய தன்மை, பெண்ணுக்குரிய தன்மை இரண்டும் விகிதசாரக் கலப்பில் வித்யாசப் படலாம் ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. அந்த விகிதசாரம் எந்த அளவில் இருந்தால் குழந்தைகள் ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற அளவுகோலைத்தான் ஆன்மீக ரீதியாக ஜாதகப் பொருத்தம் என்றும் விஞ்ஞான ரீதியாக உடற்கூறுப் பொருத்தம் என்றும் சொல்கிறார்கள்.
ஆகவே ஆண் தன்மையோடு கலக்கும் பெண் தன்மையின், அல்லது பெண் தன்மையோடு கலக்கும் ஆண் தன்மையின் , விகிதசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான் ஆண் என்றோ பெண் என்றோ , அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட படைப்பான அலி என்றோ , அரவாணி என்றோ ஆகிறது.
பெண்கள் ஏழு பருவத்தைக் கடந்து வருகிறார்கள்
1. பேதை : ஐந்து வயதிலிருந்து ஏழு வயது வரை இருக்கும் பெண்களை பேதை என்பர் , ஏதுமறியாப் பேதை நான் என்று பழைய திரைப்படங்களில் வசனம் வரும் . இந்தக் காலங்களில் வெகுளி அறியாமல் கள்ளங்கபடம் இல்லாமல் இருப்பர் பெண்கள்.
2. பெதும்பை : - ஏழு வயதிலிருந்து பதினோரு வயது வரையில் பெண்களை பெதும்பை என்று சொல்வர். இந்தப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அப்போதுதான் ஓரளவு சுற்றுப் புறச் சூழலை மனதில் வாங்கி புரிந்தும் புரியாமலும் இருக்கும் பருவம்.
3. மங்கை :- பன்னிரண்டு வயதிலிருந்து பதிமூன்று வயது வரையில் இருக்கும் பெண்களை மங்கை என்று அழைப்பர். ,அதாவது ஆங்கிலத்தில் டீன் ஏஜ் தொடங்கும் பருவம் ஆகிய தர்ட்டீன் என்னும் பதிமூன்று வயதைத் தொடும் நேரம். இந்த நேரத்தில் அவர்களின் புரியும் உணர்வுகள், அதிகப்படும். உடலும் அதற்குரிய பருவத்தை அடைந்து பெரியவளாகும் தகுதியை அடையும் பருவம். இந்தக் காலங்களில் வீணான கற்பனைகள் வளரும். அவர்களது உடல் வளர்ச்சியை அவர்களே வியந்துகொள்ளும் காலம். அவர்களின் வாளிப்பை அவர்களே நேசிக்கும் காலம். தான் பெரிய அழகி என்று கருவம் வரும் காலம். பொதுவாக கருவம் வந்தாலே அடி விழும் என்கிற அனுபவம் கொண்ட பெரியவர்கள் எச்சரிக்கை செய்யும் காலம். அந்த எச்சரிக்கைகளை காதிலே வாங்காமல் உல்லாசமாகப் பட்டாம் பூச்சியைப் போல் ஓடி ஆடி மகிழும் காலம். இந்தக் காலங்களிதான் பல பட்டாம் பூச்சிகள் விட்டில் பூச்சிகளாக மாறி விளக்கை நோக்கி ஓடி அதிலே விழுந்து தம் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் காலம்.
4. மடந்தை :- பதினான்கு வயதிலிருந்து 20 வயது வரை பருவ காலம் என்று சொல்லக் கூடிய பருவம். இந்தப் பருவத்துப் பெண்களுக்கு மனதில் இயற்கை அளவில்லாத வரண ஜாலங்களை அள்ளி வீசும் .
5. அரிவை :- 20 வயதிலிருந்து 26 வயது வரை தன்னிச்சையாக முடிவெடுக்கும் பருவம்
தெரிவை : - 27 வயதிலிருந்து 31 வயது வரை எடுக்கபட்ட முடிவுகள் எப்படிப்பட்ட பலன்களைத் தருகின்றன. எங்கே தவறு செய்தோம், அல்லது எங்கே சரியான முடிவுகளை எடுத்திருக்கிறோம் என்று உணர்ந்து அதற்காக வருந்தவோ, அல்லது மகிழவோ செய்யும் காலம்
பேரிளம் பெண் – 32 வயதிலிருந்து நாற்பது வயது வறை விளைவுகளின் சுகங்களையோ அல்லது கனத்தையோ உணர்ந்து தன்னையே உணரும் காலம்.
கருப்பையில் கரு உருவாகும்போதே ( XY chromosomes make a man a man ) ( xx chromosomes make a woman awoman கலப்பின் விகிதாசாரத்தை வைத்து தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. XY கலப்பாக இருந்தால் ஆணாகவும் xx கலப்பாக இருந்தால் பெண்ணாகவும் , XXY அல்லது xxx கலப்பாக இருந்தால் திரு நங்கையாகவும் ஜனனமெடுக்கும் பிறவிகள்.
ஜாதகத்தில் ராசிப் பொருத்தம், நக்ஷத்திர பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,யோனிப் பொருத்தம் , தினப்பொருத்தம் ,மஹேந்திரப்பொருத்தம் இன்னும் பிற பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம்.
விஞ்ஞானத்தில் ரத்தத்திலுள்ள வகைப் பொருத்தம், ஜீன் பொருத்தம் குடும்ப பாரம்பரியப் பொருத்தம் இன்னும் பிற பொருத்தங்கள் . இவைகளை கணக்கில் கொண்டுதான் ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும். பொருத்தங்கள் சரியாக இல்லை என்றால் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
இந்த உலகமே கணிதமயமானது. இங்கு பெரியோர்களால் வகுக்கப்பட்ட சாஸ்திரங்கள், அல்லது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீனவழி முறைகள் எல்லாமே பல வகையான கணிப்புகள் ,கணக்குகள்தாம்.
நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக எதையுமே ஒப்புக் கொள்ளாமல் , எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்கிற தெளிவில்லாமல் நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்தான், தடுமாற்றங்கள்தான் இப்போதய விவாகரத்துக்களுக்கு காரணம்.
பெண்ணுக்குளே ஆணும் உண்டு. ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகிப் பின் இரண்டாகி ,பின் பலவாகி மீண்டும் ஒன்றாவதுதான் உலக நியதி. அதுதான் அர்த்தநாரி தத்துவம்.
“வேதியல் படித்தால் தெரியும்
வேதம் படித்தாலும் புரியும்,
வேதியல் விந்தை வேதம் தான்
வேதியலின் தந்தை வேதம்
வேதியலின் வர்கமூலம்”