சொர்க்கம்.

 ஓம்என்ற எழுத்து நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒலி வடிவாக மூன்று பகுதிகளும், ஒலி அற்றதாக ஒரு பகுதியும் உள்ளது. ஒலி வடிவான மூன்று பகுதிகள் முறையே அகாரம், உகாரம், மகாரம் அதாவது அ, , , என்ற மூன்ரெழுத்தின் வடிவே ஓம்”. ஒலியற்ற நான்காவது நிலையே துரீயம்எனப்படும் பரம்பொருள். ஆத்மாவே பிரம்மம். இந்த ஆத்மா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆத்மா சட உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை விஸ்வன்என்ற பெயருடன் விழிப்பு நிலையில் உள்ளது. இது முதல் நிலை. அதே ஆத்மாவானது சூக்கும உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை தைசசன்என்ற பெயருடன் கனவு நிலையை அடைகிறது. இது ஆத்மாவின் இரண்டாம் பகுதியாகும். அதே ஆத்மா காரண உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை பிராக்ஞன்என்ற பெயருடன் அறியாமையையும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கிறது. இது மூன்றாம் நிலை. ஆத்மாவின் நான்காம் நிலையின் பெயர் துரீயம்எனப்படும். துரீயம் எனில் நான்காவது என்பர். இந்த துரீயம் அறிவு வடிவமானது. எந்த உடலுடனும் சம்பந்தப்படாதது. ஓங்காரத்தின் ஒலி அற்ற நிலையே துரீயம்”. ஆத்மவின் மற்ற மூன்று அம்சங்களான விச்வன், தைசசன், பிராக்ஞன் நிலையற்றதாக உள்ளது. ஆனால் ஆத்மாவின் துரீய அம்சம் நிலையானது.
,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,'' ஒருவர் என்று பிரசங்கம் செய்தார்.

இதை கேட்ட ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது, ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை. அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத் திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா?'' 
அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார். ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது. புல் பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் வந்தது.
''
கிருஷ்ணர், புத்தர், இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.
பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது. இனிய சோலைகள், நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,
''
இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட கிருஷ்ணர், புத்தர், இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''என்று பதில் வந்தது.
கனவு கலைந்தது.இப்போது தெளிவு ஏற்பட்டது. நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்
மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!
தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்; கோபதாபங்கள் குறையும்; நல்ல சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும் .
"
செத்தாரைப் போலத் திரி " இப்படியும் ஒரு ஞானி சொல்லியிருகின்றார். இப்போது நமக்கு விடை கிடைத்து விட்டது. என்ன மனம் திறந்து மௌனமாகி ஜடம் போலாகவேண்டும். மனமிறந்து மௌனமாகி செத்தாரைப் போலத் ஆனால் இறைவனை நமது உடலாகிய ஆலயத்தில் உள்ளே காணலாம் அனைத்தும் சிவன் காலடியில்... 
அனைத்தும் சிவன் காலடியில்...
அண்டப் பெருவெளியில் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவை உள்ளன. தங்களுடைய தவ வலிமையால் ஞானிகள் அவற்றைத் தேடிப் பிடித்து உலகுக்கு வழங்கி உள்ளனர்.
இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன. சூரியன், சந்திரம், மரம், வீடு, நீங்கள், நான் எல்லாமே தொடர்பு உடையவையே. இவற்றில் ஏதவது ஒன்றின் சிறு அசைவும் (மன அசைவு உட்பட) இந்த அண்டம் முழுவதும் பாதிக்கக் கூடும்.
சில மனிதர்கள்(அரசியல்வாதிகளைப்போல) அதிகம் பேசுவார்கள். கடவுள் பேசுவது இல்லை. ஆனால், கடவுள் அனைத்தையும் செய்கிறார்.
இந்தப் பிச்சைக்காரனுக்கு மிகப் பெரிய பணி தரப்பட்டு உள்ளது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவன் தன்னுடைய வேலையைச் செய்கிறான்.
ஒரு லட்சம் வீரர்கள் கோட்டையைத் தாக்கினாலும் ஒருவன்தான் கோட்டை மேலேறிக் கொடியைப் பறக்க விடுவான். அதைப்போல மனிதர்களில் வெகு சிலர்தான் கடவுளுக்கு அருகில் செல்கிறார்கள். அதற்கு ஆன்மிக சாதனை தேவை.
புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது. அது குருவிடம் இருந்து சீடனுக்கு வரவேண்டும்.
இந்தப் பிச்சைக்காரனின் மூன்று ஞானத் தந்தைகள் நிறையவே பணி செய்தனர். அரிவந்தர் ஆரம்பித்தார்; ரமண மகரிஷி கொஞ்சம் செய்தார்; ராமதாசர் நிறைவு செய்தார்.


ஐந்திரம், ஐந்தீ வேட்டல், முத்தீ ஓம்பல் 
----------------------------------------------------------------------------------------
ஐந்திரம் : 
-------------
மனித வாழ்வுக்குத் தேவையான முன் அறிவிப்புக்களை வழங்கிடும் பணியைத் தெளிவாக ஐந்திரம் என்ற ஐந்து வகைப்பட்ட கலைகளாக பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
அவை
1.
பிறப்பியல் (சாதகம்),
2.
வரியியல் (கைரேகை),
3.
பெயரியல் (பேர் ராசி),
4.
அங்கவியல் (உறுப்பிலக்கணம்),
5.
மனையியல் (கட்டிடக் கலையியல் சாத்திரம்)
.
ஐந்தீ வேட்டல்:
-----------------------
இதேபோல் அருளுலகத்தவர்களிடமிருந்து அருளைப் பெறுவதற்கு ஐந்தீ வேட்டல், முத்தீ ஓம்பலுடன், எண்வகை பூசைவிதிகளை, பூசைமொழிகளை பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
அவை
1.
ஓகம் செய்தல்,
2.
ஓமம் செய்தல்,
3.
யாகம் செய்தல்,
4.
யக்ஞம் செய்தல்,
5.
வேள்வி செய்தல்
என்று ஐந்து வகைப்பட்ட கலைகளாக செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
.
முத்தீ ஓம்பல் :
------------------------
1.
சூரியனை வழிபடுதல் (கந்தழி நிலை),
2.
திங்களை (சந்திரனை) வழிபடுதல்,
3.
விண்மீன்களை வழிபடுதல் (கொடிநிலை)
மூன்று வகைப்பட்ட கலைகளை பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள்.
Bottom of Form

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக