கண் புரை (Cataract) ஐ குணமாக்கும் எளிய மருந்துகள்!

கண் புரை (Cataract) ஐ குணமாக்கும் எளிய மருந்துகள்!
.

கண்ணில் பூ விழுதல்...
.

நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும்.

இதனால் விழித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். இதற்கு நவீன அறிவியலில் அறுவை சிகிச்சை மூலமாக புதிய செயற்கை கண் வில்லையை வைப்பதுதான் தீர்வாகக் கூறப் படுகிறது. தமிழில் இதனை கண்ணில் பூ விழுதல், விழிப்புரை , கண்புரை , கண்திமிரம் என்றும் அழைப்பர்.

இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும்.
.

இன்றைய நாளில் கண்புரையை அகற்றி - அதன் பின் செயற்கை விழித்திரையை பொருத்துவதற்கு பணம் 5000/- இருந்து 50000 /- வரை செலவகிறது.!!!!
செலவு செய்யபடுகிறது !!!!!!!
.

எனினும் நமது முன்னோர்கள் இதற்கான தீர்வை அருளியிருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான ஒன்று.

தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் கண்ணில் பூ விழுதலை நிவர்த்திக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார்.
.

பாரடா நற்தேனில் சங்கா லாட்டி
பருங்குன்றி மணியது சோலிரண்டு போதும்
நேரடா மண்டலந்தான் விழியிற் போடு
நில்லரிது நில்லரிது பூவிட்டோடும்
மாரடா திரோதாயி மாய்கை தள்ளு
மகத்தான என்குருவின் முறை தப்பாது
சேரடா இளவென்னீர் சாதங் கொள்ளு
சேராதே புளிப்புகையுந் தள்ளிப் போடே
.

சுத்தமான தேனில், சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக கண்ணில் போட வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்துள்ள பூ அகன்று விடுமாம். இதற்கென சில பத்திய முறைகளும் உள்ளன, இந்த கால கட்டத்தில் உடலுறவு தவிர்க்க வேண்டுமாம். மேலும் சாதத்தில் சுடு நீரை விட்டு சாப்பிடச் சொல்கிறார். புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

# ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

# இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

# மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

# நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

# ஐந்து : நல்ல தேனை நாயக்கு வைத்தால் நாய் சாப்பிடாதாம். சர்க்கரைப்பாகாக இருந்தால் மட்டுமே நாய் சாப்பிடுமாம்
.

எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தீர்வு தானே.....

எனினும் அந்த காலகட்டத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தேரையரால் அருளப் பட்ட இம் முறைகளை தற்போதை நவீன அறிவியலோடு இணைத்து ஆராய்ந்து மேம்படுத்தினால் எளிய செலவில்லாத மருத்துவ தீர்வு ஒன்றினை நம்மால் முன் வைக்க முடியும். ஆர்வமுள்ளவர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாய் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.

இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே, தீர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
.

கண் புரை (Cataract) குணமாக்கும் மற்றுமொரு எளிய மருந்து!
.

இந்த தகவல் கோரக்கர் அருளிய "ரவிமேகலை" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
.

பூவிழுந்த கண்ணுக்குமூலி கேளே
விள்ளுவேன் பூவிழுந்த கண்ணினோர்க்கு
விகற்பமற ஐந்தேழு ஒன்பதுநாள்
சள்ளையறக் கோவைச்சாறு சிரசிலூற்றி
சாரவே தேய்த்துப்பின் காண்கையாரைத்
தெள்ளிதமாய் பெருவிரல்கள் நகத்திலும்
தொல்லையற ஊற்றிடவே பூவும்நீங்கும்
கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும்
.

கோவை சாறு எடுத்து அதனை தலையில் விட்டு நன்கு தேய்த்த பின்னர், கை பெருவிரல் நகங்களில் ஊற்றிட வேண்டுமென்கிறார். இவ்வாறு தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்த பூ அகன்று விடும் என்கிறார்.

கோவை சாறு என்றாலே அந்த இலையினுடைய சாறு தான். 20, 30 தலைகளை பறித்து கல்வத்தில் கொட்டி தனியாக சாறு பிழியாமல், கொட்டிய அந்த தழையோடு எடுத்து தலையில் பிழிந்து தேய்த்து கொண்டு, கை விரலிலும் பிழிந்து கொள்ள வேண்டும்.

274 சிவாலயங்கள்

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.
சென்னை மாவட்டம
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.
03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.
04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. – 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) – 044 – 2752 3019, 98423 09534.

சீர்காழி சட்டை நாதர் திருக்கோவில்

திருக்கயிலாயத்தைத் தனது சிறப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் குரு மூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும், சங்கம மூர்த்தமாக பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தும் வருகிறார்.இம்மூன்று மூர்த்தமாக தனித்தனியே பல தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், இத்தலத்தில் மூன்று மூர்த்தங்களும் ஒருங்கே விளங்க எழுந்தருளியுள்ளார்.
லிங்க மூர்த்தம் - இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீசுவரரே லிங்க மூர்த்தம். இறைவி பெயர் திருநிலை நாயகி. அம்மையின் ஆலயம் தனியே உள்ளது.
குரு மூர்த்தம் - இங்கு மலை மீது எழுந்தருளியிருக்கும் தோணியப்பரே குருமூர்த்தம். சம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு இவரே. அம்மையின் பெயர் பெரியநாயகி.
சங்கம மூர்த்தம் - இம் மூர்த்தம் சிவ மூர்த்த தலங்களுள் ஒன்றான பைரவ மூர்த்தம். இந்த ஆலயத்தில் பைரவர் எட்டு வடிவங்களில் தோன்றி, சுதந்திர பைரவர், சுயேச்சை பைரவர், லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பிச்சையா பைரவர், நிர்மாண பைரவர், பீஷ்ண பைரவர் எனப் பெயர் பூண்டுள்ளார். இந்த அஷ்ட பைரவர்களும் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் உள்ளனர். இந்த ஆலயத்தில் அருள்மிகு சட்டைநாத சுவாமியே பிரதானம். அவரது பெயரிலேயே இந்தக் கோயில் விளங்குகிறது.கீழே கோவில் கொண்டிருப்பவர் பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீசுவரர், இடையில் நடுத்தளத்தில் உள்ளவர் தோணியப்பர். மேலே, இரண்டாம் தளத்தில் உள்ளவரே சட்டைநாதர்.வாமன அவதாரகுள்ள வடிவில் இருந்த விஷ்ணு மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டார். மகாபலியும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார். உடனே விஷ்ணு ஓங்கிய நெடிய அவதாரம் எடுத்தார். முதல் அடியாக மண்ணுலகையும், இரண்டாவது அடியாக விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது மகாபலியின் தலைமீது காலை வைத்து அழுத்தி, அவனைப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.
இதன்பின் விஷ்ணுவுக்குக் கர்வம் தலைக்கேறியது. தானே உயர்ந்தவன் என்ற மமதை ஏற்பட்டது. தேவர்கள் அவரின் கர்வத்தை அடக்கச் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் வடுகநாதர்பைரவர் உருவெடுத்து விஷ்ணுவை மார்பில் அடித்து வீழ்த்தினர்.விஷ்ணு இறந்ததும் லட்சுமி சிவபெருமானிடம் ஓடோடிச் சென்றாள். தனக்கு மாங்கல்யப் பிச்சை தரும்படி கதறினாள். சிவபெருமான் விஷ்ணுவுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவரை உயிர் பெற்று எழச் செய்தார்.விஷ்ணு, சிவபெருமானிடம் தன் எலும்பையும் தோலையும், அணிந்து கொள்ள வேண்டுமென வேண்ட, இறைவனும் அவருடைய எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டை நாதர் [பைரவர் ]ஆனார்.பெண்கள் தலையில் இருக்கும் பூவைக் கையில் எடுத்துக் கொண்டும், ஆண்கள் மேலே சட்டை இல்லாமலும்தான் சட்டைநாதரைத் தரிசிக்க வேண்டும். வெளியே வந்தபின் பூவை மறுபடியும் தலையில் வைத்துக் கொள்ளலாம் என்பது இங்கு பழக்கமாக இருந்து வருகிறது.இரண்டு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் ஐந்தடி உயரத்தில் சட்டை நாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.வெள்ளி தோறும் சட்டை நாதர் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. நெய் வடையும் பாயசமும் இவரது பிரசாதங்கள்.சட்டை நாதரைத் தரிசித்தால் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிவபுராணம் ..

சிவபுராணம் என்பது திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்
சிவபுராணத்தின் சிறப்பு :
-----------------------------------------
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
சிவபுராணத்தின் நோக்கம்
--------------------------------------------
முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.
சிவபுராணத்தின் அமைப்பு
---------------------------------------------
உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.
சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்[தொகு]
-------------------------------------------------------------------------------------------
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.
இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.
இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.
சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.
இறைவன்[தொகு]
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்
உயிரும், மலங்களும்
-------------------------------------
உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்
பிறவிச் சுழல்
----------------------
உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.
இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
அல்லல் பிறவி அறுப்பானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

எடையே இல்லாத ஒன்றுமில்லாத ஒன்று....

எடையே இல்லாத அந்த ஒன்றுமில்லாத ஒன்று தான் இந்த 70 கிலோ எடையை இயக்கிக் கொண்டிருக்கிறது!70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2.
கார்பன் 16 கிலோ கிராம்
3.
ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4.
நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5.
கால்சியம் 1.0 கிலோ கிராம்
6.
பாஸ்பரஸ் 780 கிராம்
7.
பொட்டாசியம் 140 கிராம்
8.
சோடியம் 100 கிராம்
9.
குளோரின் 95 கிராம்
10.
மக்னீசியம் 19 கிராம்
11.
இரும்பு 4.2. கிராம்
12.
ஃப்ளூரின் 2.6 கிராம்
13.
துத்தநாகம் 2.3 கிராம்
14.
சிலிக்கன் 1.0 கிராம்
15.
ருபீடியம் 0.68 கிராம்
16.
ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17.
ப்ரோமின் 0.26 கிராம்
18.
ஈயம் 0.12 கிராம்
19.
தாமிரம் 72 மில்லி கிராம்
20.
அலுமினியம் 60 மில்லி கிராம்
21.
காட்மியம் 50 மில்லி கிராம்
22.
செரியம் 40 மில்லி கிராம்
23.
பேரியம் 22 மில்லி கிராம்
24.
அயோடின் 20 மில்லி கிராம்
25.
தகரம் 20 மில்லி கிராம்
26.
டைட்டானியம் 20 மில்லி கிராம்
27.
போரான் 18 மில்லி கிராம்
28.
நிக்கல் 15 மில்லி கிராம்
29.
செனியம் 15 மில்லிகிராம்
30.
குரோமியம் 14 மில்லி கிராம்
31.
மக்னீசியம் 12 மில்லி கிராம்
32.
ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33.
லித்தியம் 7 மில்லி கிராம்
34.
செஸியம் 6 மில்லி கிராம்
35.
பாதரசம் 6 மில்லி கிராம்
36.
ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37.
மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38.
கோபால்ட் 3 மில்லி கிராம்
39 .
ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40.
வெள்ளி 2 மில்லி கிராம்
41.
நியோபியம் 1.5 மில்லி கிராம்
42.
ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43.
லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44.
கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45.
டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46.
இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47.
பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48.
தால்வியம் 0.5 மில்லி கிராம்
49.
இண்டியம் 0.4 மில்லி கிராம்
50.
தங்கம் 0.4 மில்லி கிராம்
51.
ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52.
தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53.
வாளடியம் 0.11 மில்லி கிராம்
54.
தோரியம் 0.1 மில்லி கிராம்
55.
யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56.
சமாரியம் 50 மில்லி கிராம்
57.
பெல்யம் 36 மில்லி கிராம்
58.
டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!