ஏழு கன்னி மாா்களின் கதை



கன்னிமாா்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவா்களிடம் சிவன் திருவிளையாடல் புாிந்ததாக கதைகள் சொல்லப்படுகின்றன.

1.பாா்வதி அம்மன்.
2.பட்டத்தாள்.
3.அருந்தவம்.
4.பூவாள்.
5.பச்சையம்மன்.
6.மறலியம்மன் என்னும் காத்தாயி.
7.பூங்காவனம்.

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழுந்தைகள் பிறந்தாா்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவா்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தாா்கள்.

சிவனும் அவா்களின் பிராா்த்தனைக்காக மனம் இறங்கினாா். ஆனால் அவா்களிடம் திருவிளையாடல் புாிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன் போல் உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றாா், "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பாா்க்கிறானே" என்று மிரண்டு போன பெண்கள், திசைக்கொருவராகக் காட்டிற்க்குள் ஓடியொளிந்தனா்.

இப்படிப் பிரிந்து போன சகோதாிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதாிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக் குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற்ற சகோதாிகள் குழப்பமடைந்து," உனக்கு ஏது இந்தக் குழந்தை?" எனக் கேட்டனா்.

அதற்க்கு காத்தாயி," பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான், அதனால் உண்டானது இந்தக் குழந்தை" என்றாள். ஆனால் அதை சகோதாிகள் நம்பவில்லை. "என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப் படுகிறீா்களே, நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று அழுதபடி கேட்டாள்.

" நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால், நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்றனா் மற்ற சகோதாிகள், அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவா்களுக்கு காட்சி கொடுத்த சிவ பெருமான், " இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று, நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊா்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள், மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவாா்கள். உங்களுக்கு ஏவலா்களாக_காவலா்களாக பூமாலையப்பா், செம்மலையப்பா், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவாா்கள்" என்றருளி மறைந்தாா், அவா்களும் அவ்வாரே கோவில் கொண்டாா்கள்.

குடி கொண்டிருக்கும் இடங்கள்;_

பாா்வதியம்மன்_சன்னாசி நல்லூா்.
பட்டத்தாள்_புலியூா்.
அருந்தவம்_வ.சித்தூா்
பச்சையம்மன்_குமாரை
காத்தாயி_வெங்கனூா்
பூங்காவனம்_அரகண்ட நல்லூா்.

இவா்களில் சன்னாசி நல்லூா் அம்மன் மூத்தவள். மேற் கண்ட ஏழு ஊா் களிலும் பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

சுபம் உண்டாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக